Thursday 5 August, 2010

கனவே கலையாதே



ஓர் இரவின்
ரகசியத்தை அறிய
முயல்கிறேன்
கனவுகள் தின்ற அறிய
கனங்களில்  எத்தனை
ருசிகரம்  !

பத்து மாதம்
கருவறையில் கண்ட
இருளில் கூட
இத்தனை பிளவுகள்
இருந்ததில்லை!

ஒளியை கண்டுகொண்ட
கண்களும் இறந்தபின்
கண்ணீர்விட்டு அழுத
நேகுழ்ச்சி
ஆனந்த கண்ணீர்!

வெற்றியில் முடிந்தால்
சுகமான அனுபவம்
தோல்வி என்றால்
இறுக்கத்தின் உதிர்வு
பயம் தரும்
பதட்டமான கனவு !

கனவே விலை குடுத்து வாங்க
முயலவில்லை
விட்ட குறை
தொட்ட குறை
பூர்வ பந்த
முறிவு
பகலும் இரவுமாய்
இந்த அதிர்வுகள்
வலித்தெடுக்கும் புது
உணர்வுகள்!






0 comments:

Post a Comment