Sunday 29 August, 2010

ஊராம் வீடு


சித்திரை என்றதும்
விழாக்காலம்
சில
ஈர விழிகளை கடந்து
செல்லும் கனாக்காலம்

தனின் முதல் வாரம்
தேர் இழுத்து
கை பழுத்து
உன் வீடு வருகையில்
நீர் சுமந்து பானையுடன்

நீ வருகையில்
இளமையின் இனிமையை
வருடி கொன்று இருப்பாய்

டுத்து வாரம்
ஏதொரு சாக்கில்
சந்திக்க நினைத்து
ஆற்றங்கரையின் மணலில்
நிலாச்சோறு கொண்டு
வெண்ணிலா
மண்ணின் மடி இறங்குவாள்

சூடுபட்ட சொற்களால்
உன் உறவினன்
ஏசி பார்த்தும்
திருந்தாத 
நாய்குட்டியாய்
வீடு வரை காவல்
வந்து சென்றிருப்பேன் !

நீர் இறங்கி
விலகி செல்லும்
இலைகள்
தலை அசைத்து
ஒரு சுகத்தை வேண்டுமாம்

குறுக்கும் நெடுக்கும்
இறுதி வாரத்தில்
நத்தையாய் ஊறி
நாணலாய்  வளைந்து
கீற்று கொட்டகையாய்
ஒடிந்து இருப்பேன்

நீயும் ஏறுமுகமிட்டு
ஒரு சொல்லில் கனவுகளை
கலைத்து விட்டாய்

டுத்த திருவிழாவில்
பார்ப்போமென்று!


0 comments:

Post a Comment