Saturday 14 September, 2013

கோடாங்கி





நாம் மனதளவில் இணைந்தோம்  
பின்பு ஏன் பிரிந்தோம் .
உற்சாகத்தை கேட்டதும் பெற்றது  பார்வை 
கண்ணீருக்கே பொறுக்கவில்லை போலும் 
இதயத்தை நினைத்து கொண்டு 
கரைஏறி அமர்ந்தது  வலியாய் ...

உதறல் ஊந்தி இறுதியில் 
என் செவ்வாயில் வந்து நின்றது 
முனகலான மன்னிப்பு மட்டுமே ..

பிரிவுகள் என்பது நிரந்தரமே 
ஆனால் அது நல்லதொரு
பரிவுகளால் குழி தோண்டி 
புதைக்கப்பட்டன ...

இன்றும் கழிவுகள்  இல்லாத 
மறக்க நினைக்கும் நினைவுகளை 
தேடி பார்க்கிறேன் 

சுகமாகவும் சுமையாகவும் 
பதியம் போட்டது 
நிகழ்வுகளே அன்றி 
நாம் அல்ல !