Monday 25 April, 2011

அடுக்குத்தொடர்


அலைகடலென தாவி வரும்
ஆறடி அறிவே
அன்பில் தத்தளிக்கும்
மழையின் மாங்குயிலே
பொன்மேக சிரிப்பே
பூங்காவன சிலிர் பில்லே
சின்ன சிறு குருவியே

சிற்றிடை நதியே
வாதம் செய்து வார்த்தைகளில்
வதம் செய்ய துடித்து  
பின்தொடரும்  அருவியே
தென்னை ஒளியே
தேன்மதுர சுவை பேச்சே
அடங்காமல் கதிர் வீசும் நெற்றியே
சாலையிடும் பாதமே
கோலமிடும் வெட்கமே
நளினத்தின் சுளியே
நாதத்தின் மொழியே

தேவதாயின் மகளே
தேடலின் பசியில் ஒளிந்து
தீராத ஆசையில் விழைந்து
எங்கே மூழ்கிவிட்டாய்
தூக்கம் கலைத்து
விழி வாசிப்பாயா
இந்த உலகம் கவர்ச்சியாய்
உடை  அணிந்து விட்டது
பார்த்து விட்டு போ ............



Monday 18 April, 2011

வா வா வெண்மதியே


நீ உம் என்ற
வினாடிகளில் விடை தேடிய
பறவை தான்
இன்று இளப்பார
தோள்களில் துள்ளி விளையாடி
கொண்டு இருக்கிறது !

நீ இல்லை என்று
சிணுங்கிய கண் அசைவின்
மறு கணங்கள் தான்
ஆகாயத்தின் ஒரு துளியை
எதிர்நோக்கும் சுபிச்சம்  
என்கிறது இந்த
வெட்கப்பட்ட பொன் சிரிப்பு...........

பொய் என்றாலும்
மெய் என்றாலும்
எனக்கே தெரியாமல்
என்னுள் வார்தைக்களாய்
முளைத்து உதிர்ந்து விட்டாய்
நினைவுக்கு மணிகட்ட
உன் நிழலிலே மிதந்து
அரியணை தேடி
பால் ஒளியின்
சன்னல்  ஓர வேடிக்கையாளன்
வெண்மதியே ...

மறைமுகமாய் கனவுகள்
இன்று உன்னுடன் நின்று இருக்கும்
அந்த முனுகளில் ஆயிரம் ஆசைகள்
சின்ன சிறு குழந்தையாய் பிறந்து இருக்கும்
முடிந்தால் நெஞ்சிலே வைத்துகொள்
யாரிடமும் சொல்லாத
கனவு காதல்
ஒரு தலை இரவில்
தலையணை பிரிவிகளுடன்................