Sunday 5 June, 2011

யாட்கை

கரங்களே இல்லாத
முட்போர்வையில் சிக்கி தவிக்கிறது
இன்று பிறந்துவிட்ட மைனாகுஞ்சி .
அந்த தாய் குருவியின்
சிறகுகளின் வேகத்தில்
கண் விழித்து
காணொளி காட்சியை
கட்டுடைதைத்தது
இன்றைய மௌன  உலகம் !

தான் படுதிரிந்த
வைக்கோல் சூட்டை விட
சூரிய கதிர்களின் பாய்ச்சல்
சற்று விதமான
புது சுகத்தை அள்ளி
பருகி கொண்டு இருந்தது ..

மரத்தில் ஊரும எறும்புக்கு கூட
இது இறை என்றால்
மிகையாகது!

மஞ்சள் வெயிலில்

இலையுதிர் காலம்
மரத்தின் சுபிச்சத்தை
வேரோடு அறுத்துவிட்டு
முகில்களை வரவேற்கும்
சருகளை கீழ செல்
என்றே கட்டளையிட்டுருந்தது !

ஒரு சில வினாடிகளில்
குட்டி மைனாவின்
மூக்கின் ரகசியத்தை
சருகுகளும் உரசியே
கண்டுக்கொண்டன!

பாதாள   உலகின்
நிரந்தர பசி யாட்கையில்
சிறகுகள் ஓடியும்
முன்னரே
இரு சொட்டு குருதி ஓட்டத்தில்
ஒடிந்து விழுந்த
கூர் குச்சி குற்றி
விபோச்சனம் பெற்றது

யார் செய்த குற்றம்?











பால் பறவை


நீ சோகமாய் இருக்கிறாய்
என்றே
நேற்றைய கனவுக்கு பின்
ஈரமான தலையணை கண்கள்
பார்த்து கொண்டு இருக்கிறது ................

கண்ணீர் பாலும்
வடித்து கொண்டு இருந்தது!

உன் இரு
கைகள் தேடுகிறேன் வழியில்
உன் இதயம்
காதல் கனம் தாங்காமல்
சுகமான சுமை இதுவென்று
தூரத்தில் இருந்தும்
வழி தெரியாத பறவை போல்
சிலாத்து கொண்டு இருக்கிறது !

ஒரு கல்லினால்
வட்டமிடும் சுழல்களை  போல்
இந்த புருவங்களின் பசி யார்த்த
நல்ல காட்சி திரையோடு
உன் இதயப்பை நன்றாக உருவகபடுத்தி
கனவுலகின் விழி நுனியில்
தேக்கிவைத்துக்கொள் !

பிறந்து விட்ட கற்பனைகள்
எல்லாம்
பிறரிடம் சரியாக சேர்வதுமில்லை
கண்டு விட்ட கண்களும்
மீண்டும் பார்த்து விட சோர்வதும் இல்லை !

உன் சிரிப்பிற்காக நான் காயப்பட
காத்திருக்கிறேன்
இதோ இந்த கனவு வாசலில் ...
மனம் பிறழா  
கால தடங்களை வரவேற்கிறேன் ...
எங்கே இருக்கிறாய்
உள்ளம உணரும்
அதிர்வு நடனம்
காதொரங்களில் ......................




Thursday 2 June, 2011

மஞ்சள் நேரங்கள்




உன்னை தூரத்திலே பார்த்து
பழகிவிட்ட கண்களுக்கு கூட
வியப்பாய் இருந்திருக்கும் ....
கண்களுக்குள் அழகு
பொறாமை போட்டி
உதிர்த்து விட்டது போல ...................

நீ சபதமாய் கோபித்து
கொள்ளும் முனகல் எல்லாம்
சேகரித்தால் அன்பின்
அர்த்தனாலங்களில் அதிர்வு
ஓசை மட்டும் ரீங்காரமிடும்.....

நீ ஐய்யோ அட பாவி
என்ற சினுகல்களில்
இந்த சென்மத்தின்
பாவங்கள் எல்லாம்
புதைந்தோடிவிடும் ...............

விரலின் இருக்கங்களில்
துருவங்கள் மாறுவதுப்போல்
இமயம் தொட்டு திரும்புவது
இருவரின் வெள்ளை வான் பறவை
ரகசிய புன்னகை .............

காலத்திடம் கோபம் கொண்டு
மீள  முடியாமல்
வழி இல்லா ஒற்றையடி பாதயாய்
முடிந்து விடுகிறது நம் நடைப்பயணம் .................

நீ திரும்பி பார்த்து விட்டாலே
குதூகலத்தில் மிதக்கும்
பூனை நெஞ்சம் ..
திருட்டு தனமாய் இன்னும்
பத்து நாழிகை கடத்தி விட
சொல்லி வழியும் வார்த்தை
அப்புறம் வேற என்ன .......................