Monday 17 September, 2012

நன்றி மறவேல்




நான் சோம்பேறியாய்
உறங்கி கொண்டிருப்பேன்
நீயோ  வெள்ளன எழுந்து
பொது தேர்வின்
இறுதி நேர எழுதுகோல் போல்
விரைவாய் ஓடி கொண்டிருப்பாய் ....

பற்பசை எடுத்து குளியல் முடிக்கவே
பாதி நேரம் எனக்குள் முடிந்துவிடும்
நீயோ
என்னை பார்த்து பார்த்து
ரசித்தே பாதி காலத்தை
முடித்து விட்டாய் ..........

ஈன்ற முதல்
ஆயுள் நீங்கும்  வரை
அன்றாடம் என் தேவையை
தேடி பிடித்த தேவதையே
நீ தந்தவை எல்லாம்
என்னுடன் நினைவுகள் அல்ல
வளர்த்து விட்ட கனவுகள் ......

அதுவும் ஆலமரமாய்
வளர்ந்து விட்டது
உன் வியர்வை
அடி வேறாய்
பின்னலுட்டது !

இதோ உன் புகழை
விழுதுகளாய் தோரனமிட்டு
நன்றி மறவாமல்
சிறகடித்து விண்ணை நோக்கி
முயல்கிறது சோம்பேறி
பச்சக்கிளி !







Sunday 2 September, 2012

கதைகள் பேசுவோம் தோழியே






நீ
கண்ணீரின்றி மன புழுக்கமாய்
அழுது கொண்டு இருக்கிறாய் !
உன்னை நேசித்த கனம் முதல்
நானோ கற்பனை காதலுடன்
வாழ்ந்து கொண்டி இருக்கிறேன் !

பொய்யாய் உன் புன்னகையில்
தண்ணீர் வருவது
என் உள் நெஞ்சத்தில்
தெரிந்தும்
உனக்காகவே மேலும்
நீண்டிடாதோ என்ற
அற்ப சந்தோசத்தில்
மன அலைகலுக்குள்
நீந்தி கொண்டு இருக்கிறேன் !

விதி விட்ட வழி
வீதியில் பிதட்டல்களுடன்
அழையும் விசிர்  அல்ல நான்
உன் உசிர் தன்னை ஏந்தி செல்லும்
காவல்காரன் நான் !
வறட்டு பிடிவாதத்தின்
ரசிகனும் நானே !

இறக்கம் ,கருணை
என்பதில் சிக்க வைக்கும்
பாத்திரம் ஏந்திய
பிச்சைக்காரனாய் நீ நினைத்தால்
உன் சில்லறை சிரிப்பினிலே
என்னை சிறகடித்து
உன் வானம்
தேடி நான்
விரைந்து இருக்கு மாட்டேன் !
இறுதியாய்
நீ இல்லை என்ற போதும்
துவளாமல் என்னை
தூண்டி விடுவது
விழி ஓரத்தில்
சற்று முன்
உதிர்த்து போன
கண்ணீர் சுயம்பு தான் !


Saturday 1 September, 2012

நிறம் மாறா பூக்கள்




புன்னகையே உதிர்ந்து
புயலாய் மாற
என் வனமேல்லாம்
இருக்கமாய் உரசி உரசி
அனல் பற்றி
தேகம் வானம்பாடி பறவையாய்
மேல பறந்து
உச்சி கோபுரத்தின்
நிழலென
தலை சாய்த்து விழுகிறது கண்ணீர் ...
சுடு வென்னீரில்
முளைத்து விட்ட கொப்பளமாய்
கனவுகள் உடைக்க
கை இன்றி தவிக்கிறது
இந்த பொம்மை ...
என்றும் நிறம் மாற
திருமணத்தில் நறுமணம்
தேடும் விதவை பூ !!!!!!