Sunday 2 September, 2012

கதைகள் பேசுவோம் தோழியே






நீ
கண்ணீரின்றி மன புழுக்கமாய்
அழுது கொண்டு இருக்கிறாய் !
உன்னை நேசித்த கனம் முதல்
நானோ கற்பனை காதலுடன்
வாழ்ந்து கொண்டி இருக்கிறேன் !

பொய்யாய் உன் புன்னகையில்
தண்ணீர் வருவது
என் உள் நெஞ்சத்தில்
தெரிந்தும்
உனக்காகவே மேலும்
நீண்டிடாதோ என்ற
அற்ப சந்தோசத்தில்
மன அலைகலுக்குள்
நீந்தி கொண்டு இருக்கிறேன் !

விதி விட்ட வழி
வீதியில் பிதட்டல்களுடன்
அழையும் விசிர்  அல்ல நான்
உன் உசிர் தன்னை ஏந்தி செல்லும்
காவல்காரன் நான் !
வறட்டு பிடிவாதத்தின்
ரசிகனும் நானே !

இறக்கம் ,கருணை
என்பதில் சிக்க வைக்கும்
பாத்திரம் ஏந்திய
பிச்சைக்காரனாய் நீ நினைத்தால்
உன் சில்லறை சிரிப்பினிலே
என்னை சிறகடித்து
உன் வானம்
தேடி நான்
விரைந்து இருக்கு மாட்டேன் !
இறுதியாய்
நீ இல்லை என்ற போதும்
துவளாமல் என்னை
தூண்டி விடுவது
விழி ஓரத்தில்
சற்று முன்
உதிர்த்து போன
கண்ணீர் சுயம்பு தான் !


0 comments:

Post a Comment