Saturday 22 January, 2011

பிறந்த நாள் வாழ்த்து




காலத்தின் கையேட்டில்
உனக்கான வயது ஓர் ஆண்டு
கூட்டி எழுதப்பட்டுவிட்டது
அதற்கான கொண்டாட்டம்
இன்றைய பிறந்த நாள் விழா...............

வானத்தின் தேவதையால்
மலர் கொண்டு வந்துவிட்டால்
தாய் பூமியின் உறவுகள்
கைகொண்டு வாழ்த்து மாலை
தொடுக்கிறார் ..............

இன்முகமும் பன்முகமும்
சூரிய முகத்தில்
நிலா வண்ணமிடட்டும்
உன் பளீர் சிரிப்பில்
பாருலகின் ஏதொரு இடத்தில்


நீங்கி விட்ட சுகமான சுமையை
நிழலென பின் தொடர்ந்து
வழித்துணையாய்
வாழ்த்தி மகிழ்கிறேன் ..............








 














Friday 21 January, 2011

பிறை கோடுகள்




வெட்கத்தை விட்டு
வேட்டியில் முகம் மறைத்து
திருமேனியின் சுவாசம்
துறுனாற்றதை ஆட்கொள்கயில்
சட்டப்பையின்  அகர பாதாளத்தில்
நாளைக்கான அர்த்தம் தேடும்
அம்மா ..............

கண்கள் வழியில்
பிழைகள் மிதந்து
கானலை ஒளிகற்றையாய் அள்ளி வீசும்
திருத்தம் மாறா அப்பா ...................

எதிர்த்து விழைந்தால் விடையின் மடியில்
மிதக்கும் மாய அலைகள்
நீரின் சுவையுடன் கை கோர்த்து இணைகையில்

ஆசைகளின் அண்மை கால சுவடுகள்
மீண்டும் தோன்றிய இடம்
எங்கள் வீடு.............

செவ்வானம் தளிர் கொண்டு எழுகையில்
கருவாச்சியின் மின்னல் தெறிப்பில்
கோபம் நெற்றி பொட்டில் தொடங்கி
மூளை விழி பிதுங்கி
மறுமுனையின் வெளிச்சம் காணும்
போதை அரசன்
என் குடிகார அப்பன் .........................

Thursday 13 January, 2011

பிச்சைக்காரன்


உன் கண்களை விட
என்னை
ஏளனம் செய்யும் கோடரி
எதுவாக இருக்க முடியும் .......................


நீ வெட்ட வெட்ட
நககண்ணில் துளிர் விட்டு எரிகிறது
கூறான
நெருப்பு ஆயுதம் ..............

நகையுண்ட கண்களை
குத்திகிழித்திட மெல்ல நகர்கிறேன்
நீராவியாய் வேகத்துடன்
சொகுசு வண்டியில்
வீதியுலா செல்கிறாய் ............

மீண்டும் ஒரு ஏளன பார்வை
மனம் தளராமல்
இன்றளவும்
பசியின் பக்கத்தில்
வயதின் தளவட்டில்
ஒரு சில்லறை கூடல் கூடும்
இனிய கோயில்வாசலில்
பிச்சைகாரன் ...........................................

Wednesday 12 January, 2011

தாவரம்

மனிதன் பேசுகிறான்

இதய வீட்டுக்குள்,
அந்த மனைகளின்
வாசல்
அல்லும் பகலும்
வெளியில் தெரிவதில்லை...........


புழுகத்தின் தோற்றம்
இவன் கையை கடிக்கும் நேரம்
இயற்கையுடன் மருந்து போட மறந்ததில்லை ......................


கடற்கரை,ஆற்றங்கரை ,
பூங்கா, நகையாடல் ,குளம்,குட்டை,மதில் சுவர்,
இப்படி இயற்கை உடைகள் சூடி கொள்கிறான்


ஆயினும் இயற்கைக்குள் காழ்புணர்ச்சி
இருந்துவிட்டால்...........
இவனின் தொடர்பியல்
எங்கிருந்து துண்டிக்கப்படும் ..............



பிறப்பு
உயிர் குடுக்கும்
மரபணு
உத்வேகமாய் ஊந்திய
ஆசுவாச காற்று ....


வளர்ப்பு
வளர்ந்துவிட்டேன்
தளிரின் செருக்கு
வளரவைத்தேன்
தண்ணீரின் கம்பீரம்

காத்தல்
மரத்தில் கூடுவைத்தேன்
பறவையின் பறைசாடல்
பறவைக்கு இடம் தந்தேன்
மரத்தின் மறுமொழி


அழித்தல்
ஒடிந்து விட்டேன்
சூட்டின் ஆற்றல்
ஒளிந்து கொண்டேன்
நீரின் வல்லமை


இயற்கையாய் பிறந்து
இயற்கையாய் வளைந்து
இயற்கையால் ஒடிந்து
விழும் பட்டு போன
தாவர மனிதம் ....................


















Sunday 9 January, 2011

நத்தை


ர்த்த சாம நிசிகளின்

கடினத்தை உனக்காகவே
மை பொழுதில் தாங்கி நிற்கிறேன் ..........


ருளுக்கு முரண் வைக்கும்
விடுகதையை சூரியனின் வாசலில்
டலின் சீற்றமான காலைப்பொழுதுடன்
இணைத்து விட்டாய் ...................


விழிகளின் துவாரத்தில்
ஒற்றை கண்ணினால்
னவுகளை சுமந்துகொண்டு
உலகை எட்டி பார்க்கிறேன் ....................

யாரோ ஒரு தேவதை
என்னை பிரிந்து
ருத்ததுடன் விடை பெறுகிறாள் ............

சுபத்துடன் பூபாளம் பாடும்
பறவைகள் மரங்களில் இருந்து
மலைகளில் நகர
துள்ளி குதித்து ஓடும்
ஆட்டு குட்டியின் மணியோசை
காதோரமாய் கீறலில்
சிந்தி விழுந்திருந்தது ...................


யதான பாட்டியின்
கம்பிளி போர்வை
ன்றும் கரை திரும்பும்
அலை என உள்வாங்கியது ................

ரு தேனீர் கிடைக்குமா
என்ற பதட்டத்துடன்
உதடுகள் உணர்ச்சியின்று
ரத்தை ஒட்டியிருந்தது ..............


னக்குள் அப்படியொரு
அசதியை பெற்றதில்லை
ந்த சோம்பேறி பட்டம் ............


ருந்தும் இதை மீறி
அம்மாவின் கூக்குரலுக்கு அப்பால்
நகர்கிறது
ன்றைய வாழ்க்கை நத்தை.................






















Thursday 6 January, 2011

சுற்று சூழல் அறிக்கை

இன்றைய பொழுதின்

இயற்கை சுவாசங்கள்

என்னுள் எழுந்துவிட்டன

நான் உறங்கிய மரணதூக்கதை

சற்று உசிப்பி எழுப்பிவிட்டேன்



மூக்கின் நுனியில் அந்த

பனிக்கூட்டம் புயலாய்

உருவெடுத்து

காற்றுவெளியில் எங்கோ

மற்றொரு மரத்தின்

சுவாச மர்மத்தை வென்றுவிட்டு

சத்தான கனிகளுடன்

ஒளிந்து கொள்கிறது!



கைகள் பறித்து

கூடையில் வைத்து

வியாபாரி ஒருவன்

விலை பேசுகிறான்

என் மூச்சு காற்றை .............



காற்றின் விலை

பத்து ரூபாய் தான்

அது உயிர் குடுக்கும்

என் கனியின் காற்று

யாரிலும் எதிர்த்து விழைமுடியா

சுற்று சூழல் அறிக்கை

அடங்கும் உலகசபை..................

Monday 3 January, 2011

அன்புடையார்க்கு எல்லாம்

அன்பின் அடிவருடியால்


தூரத்தில் நின்று

வெம்புவால் ,

என்றுடன் விருப்பமாய்

என்னை தீண்டுவாய் .......................

கலக்கம் மனகடையில்

தாழிட்டு புறப்பட்ட நேரம் !

செவ்வான ஊஞ்சலில்

சற்று காற்று வேகமாய் வீசிட

தடுமாறி

கம்பியை பிடிக்கும் கையாய்

உருமாறி

உன் அருகில் வந்து நிற்கிறேன்

தோற்றத்தின் வயது

முதுமை,ஆயினும்

அன்பின் ஆளுமை

இன்றும் இனிமை .......................................