Friday 21 January, 2011

பிறை கோடுகள்




வெட்கத்தை விட்டு
வேட்டியில் முகம் மறைத்து
திருமேனியின் சுவாசம்
துறுனாற்றதை ஆட்கொள்கயில்
சட்டப்பையின்  அகர பாதாளத்தில்
நாளைக்கான அர்த்தம் தேடும்
அம்மா ..............

கண்கள் வழியில்
பிழைகள் மிதந்து
கானலை ஒளிகற்றையாய் அள்ளி வீசும்
திருத்தம் மாறா அப்பா ...................

எதிர்த்து விழைந்தால் விடையின் மடியில்
மிதக்கும் மாய அலைகள்
நீரின் சுவையுடன் கை கோர்த்து இணைகையில்

ஆசைகளின் அண்மை கால சுவடுகள்
மீண்டும் தோன்றிய இடம்
எங்கள் வீடு.............

செவ்வானம் தளிர் கொண்டு எழுகையில்
கருவாச்சியின் மின்னல் தெறிப்பில்
கோபம் நெற்றி பொட்டில் தொடங்கி
மூளை விழி பிதுங்கி
மறுமுனையின் வெளிச்சம் காணும்
போதை அரசன்
என் குடிகார அப்பன் .........................

2 comments:

Philosophy Prabhakaran said...

சரக்கு பாட்டிலை பார்த்தா ஆசையில் ஓடிவந்தேன்... ஆனா நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன்...

கவி அழகன் said...

தனித்துவமான படைப்பு

http://kavikilavan.blogspot.com/

Post a Comment