Wednesday 19 October, 2011

நினைவகம்



தலையை மெல்லக்கோதி

நாயும் நரியும்

சண்டை பிடித்ததாய்

கதைக்கேட்டு

என் சுட்டி

தனத்தின் அளவை

முகம் நூர்ந்து

வரவேற்று,


நெஞ்சாகூட்டின் சூட்டை

அமிலம் தேய்த்து

பிஞ்சு விரலில்

சொடுக்கு விட்டு

மொட்டை மாடி நிலாவில்

நட்சத்திரத்தை எண்ணிவிட்டு,


கொட்டாவி விட்டு

உறங்கியாதாய்

என் தாய்

வயதானதும் மொழிகிறாள்

என் மழலைக்காலம்..................

Friday 14 October, 2011

நாக்கு துருத்தி ..........






நானும் நீயும்

கரைந்து கொண்டு இருக்கிறோம்

எச்சில் வழிய ஒரே பாதையில்
நடந்து கொண்டு இருக்கிறோம்
என்ன செய்ய
எனக்கு நரைத்து உதிர்ந்து விட்டது
உனக்கு துளிர் விட யாரோ
மண்டையை வளித்து விட்டான்
மொட்டை குழந்தையும்
வழுக்கை தாத்தாவும்
ஒற்றை ரூபாய் ஐஸ் கிரீம் தேடி.............