Wednesday 19 October, 2011

நினைவகம்



தலையை மெல்லக்கோதி

நாயும் நரியும்

சண்டை பிடித்ததாய்

கதைக்கேட்டு

என் சுட்டி

தனத்தின் அளவை

முகம் நூர்ந்து

வரவேற்று,


நெஞ்சாகூட்டின் சூட்டை

அமிலம் தேய்த்து

பிஞ்சு விரலில்

சொடுக்கு விட்டு

மொட்டை மாடி நிலாவில்

நட்சத்திரத்தை எண்ணிவிட்டு,


கொட்டாவி விட்டு

உறங்கியாதாய்

என் தாய்

வயதானதும் மொழிகிறாள்

என் மழலைக்காலம்..................

0 comments:

Post a Comment