புன்னகையே உதிர்ந்து
புயலாய் மாற
என் வனமேல்லாம்
இருக்கமாய் உரசி உரசி
அனல் பற்றி
தேகம் வானம்பாடி
பறவையாய்
மேல பறந்து
உச்சி கோபுரத்தின்
நிழலென
தலை சாய்த்து விழுகிறது
கண்ணீர் ...
சுடு வென்னீரில்
முளைத்து விட்ட
கொப்பளமாய்
கனவுகள் உடைக்க
கை இன்றி தவிக்கிறது
இந்த பொம்மை ...
என்றும் நிறம் மாற
திருமணத்தில் நறுமணம்
தேடும் விதவை பூ !!!!!!
0 comments:
Post a Comment