Thursday 2 June, 2011

மஞ்சள் நேரங்கள்




உன்னை தூரத்திலே பார்த்து
பழகிவிட்ட கண்களுக்கு கூட
வியப்பாய் இருந்திருக்கும் ....
கண்களுக்குள் அழகு
பொறாமை போட்டி
உதிர்த்து விட்டது போல ...................

நீ சபதமாய் கோபித்து
கொள்ளும் முனகல் எல்லாம்
சேகரித்தால் அன்பின்
அர்த்தனாலங்களில் அதிர்வு
ஓசை மட்டும் ரீங்காரமிடும்.....

நீ ஐய்யோ அட பாவி
என்ற சினுகல்களில்
இந்த சென்மத்தின்
பாவங்கள் எல்லாம்
புதைந்தோடிவிடும் ...............

விரலின் இருக்கங்களில்
துருவங்கள் மாறுவதுப்போல்
இமயம் தொட்டு திரும்புவது
இருவரின் வெள்ளை வான் பறவை
ரகசிய புன்னகை .............

காலத்திடம் கோபம் கொண்டு
மீள  முடியாமல்
வழி இல்லா ஒற்றையடி பாதயாய்
முடிந்து விடுகிறது நம் நடைப்பயணம் .................

நீ திரும்பி பார்த்து விட்டாலே
குதூகலத்தில் மிதக்கும்
பூனை நெஞ்சம் ..
திருட்டு தனமாய் இன்னும்
பத்து நாழிகை கடத்தி விட
சொல்லி வழியும் வார்த்தை
அப்புறம் வேற என்ன .......................





0 comments:

Post a Comment