Sunday 5 June, 2011

பால் பறவை


நீ சோகமாய் இருக்கிறாய்
என்றே
நேற்றைய கனவுக்கு பின்
ஈரமான தலையணை கண்கள்
பார்த்து கொண்டு இருக்கிறது ................

கண்ணீர் பாலும்
வடித்து கொண்டு இருந்தது!

உன் இரு
கைகள் தேடுகிறேன் வழியில்
உன் இதயம்
காதல் கனம் தாங்காமல்
சுகமான சுமை இதுவென்று
தூரத்தில் இருந்தும்
வழி தெரியாத பறவை போல்
சிலாத்து கொண்டு இருக்கிறது !

ஒரு கல்லினால்
வட்டமிடும் சுழல்களை  போல்
இந்த புருவங்களின் பசி யார்த்த
நல்ல காட்சி திரையோடு
உன் இதயப்பை நன்றாக உருவகபடுத்தி
கனவுலகின் விழி நுனியில்
தேக்கிவைத்துக்கொள் !

பிறந்து விட்ட கற்பனைகள்
எல்லாம்
பிறரிடம் சரியாக சேர்வதுமில்லை
கண்டு விட்ட கண்களும்
மீண்டும் பார்த்து விட சோர்வதும் இல்லை !

உன் சிரிப்பிற்காக நான் காயப்பட
காத்திருக்கிறேன்
இதோ இந்த கனவு வாசலில் ...
மனம் பிறழா  
கால தடங்களை வரவேற்கிறேன் ...
எங்கே இருக்கிறாய்
உள்ளம உணரும்
அதிர்வு நடனம்
காதொரங்களில் ......................




0 comments:

Post a Comment