Thursday 9 December, 2010

தீயில் கருகும் நூல்போல்

உறுத்தும் விழிகள்

பதட்ட துடிதுடிப்புடன்

இதயம் வெளிவாங்கும்

காற்று !



சுவடுகள் நிறைந்த

மஞ்சள் வானம்

கண்ணிமையில் தெறிக்கும்

ஓசைகளின் விடியல் !



கபட தபட தத்தளித்து எழும்

முன்பனிகால சூடு

எழ முடியாமல் இருளில்

தூங்கும் சூரியன்



இப்படி எல்லாம்

சுற்றி வளைத்து கொன்றது

பொற்கால காதல் அரசு !

0 comments:

Post a Comment