ஆச்சர்யம் அடிமையானது
புருவங்களை உயர்த்தி
அதன் காலங்கள்
சேதமுற்று நின்றது ,,,
பல்லாயிரம் கண்கள்
தரிசனம் பெற்றும்
உன் பேரழகை எவனும்
விலைக்கு வாங்க வரவில்லை
....
தூரத்தில் பார்த்தே
ரசித்தனர்
தூரிகை வீசியவன்
புகழ் பெற்ற
ஓவியன் ஆனான்
உன்னை தீயிலிட்டு
எரித்தாலும்
சரித்திரம் பேசும்
பேரழகி
நீ தானே ...
தோரண வாயிலில்
தொங்க விட்ட
புன்னகை வரைபடம்
........
0 comments:
Post a Comment