Friday 27 August, 2010

கர்பிணி சிரிப்புகள்



மலரின் மவுனத்தை
மழலை பற்றி
கையில் பிடித்து
கனவு கண்டு
உறங்கியதாம்

அதிர கனவுகள்
ஆறாம் மாதத்தில்
பிள்ளைக்கு
ஓர் முளை விடும்
பயிர் காலமாம்

திரும்பிய திசையெல்லாம்
வலி குடுக்க
தாய்மை உற்சாக வெளிப்பாடாய்
தடவிக்கொண்டே 
கைவைத்து தட்டுவாலாம்

சும்மா இருக்க
மாட்டியா என்று

கருவறையில் கண்ட
அந்த நிலா உலகம்
இன்று பவுர்ணமியாய்

அவள் முகத்தில்
உதித்து
ஐந்து நாழிகை
கடந்துவிட்டன!

பிள்ளையும் பிறந்து
விட்டான்
அழுகை கொண்டு
சத்தமிட்டு சொன்னான்
நான் இருக்கிறேன்
நீ கலங்காதே !






0 comments:

Post a Comment