Wednesday 1 December, 2010

செங்காற்று

நிழலின் மறைவில்


கூத்தாடும் சூரியன்

மழையின் கொதிப்பில்

மன்றாடும் தீ!



அழுகையின் சப்தத்தில்

அமைதியாய் வெளிவரும்

புன்னகை

கோழையின் வீரியத்தில்

அவிழ்ந்துவிலும் வீரம் !



தேடலின் தட்கையில்

மிதக்கும் முடிவு

கருணையின் கூட்டில்

பறந்துபோகும் அன்பு !



எழுத்துக்குள் புதையும்

விரிசலான கருத்து

நெற்றியின் உச்சியில்

எரியதுடிக்கும் தெளிவு!



எல்லாம் நிற்க இடமின்றி

சுற்றுலா சென்றால்

காற்றுடன்

சூரிய தாகமாய்

தீயின் கோபமாய்

சிரிப்பின் பேரலையாய்

வீரத்தின் வெளிப்பாடாய்

முடிவில்லா எல்லையாய்

அன்பின் அன்னையுடன்

கருது கேட்க புறப்பட்டுவிட்டால்

முடிந்தால் ஓர் நிமிட

ஆராதனை செய்யுங்கள்

தீயான பீடம் தேவையில்லை

சுவாச அஞ்சலி செலுத்தி !

0 comments:

Post a Comment