Sunday 12 December, 2010

தொட்டாசினுங்கி

ஒரு முறை தொட்டாய்
சிறு உடல்
வளைந்து நின்றேன்
மறு முறை தொடுவாய்
என்றே
நிமிர்ந்து எழுந்தேன்

கைகள் எல்லாம்
தொடுவானமாய் அதீக தூரம்
நடையாடினால்

மீள்  சுகத்தில்  மரணம்
வென்று விட்டது

கையில் வந்து விட்டேன்
உயிர் ஒடிந்த தொட்டாசினுங்கி !

2 comments:

Philosophy Prabhakaran said...

இதை எல்லாம் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு நமக்கு (எனக்கு) அறிவு இல்லை நண்பா...

வளவன் said...

உயிருக்கும் இதயத்திற்கும் என்ன தொடர்பென்று தெரியும் அல்லவா அது போதும் நண்பரே

Post a Comment