Friday 17 December, 2010

வசந்த காலம்


கண்ணீர் மழையானால்
உன் குடையில்
தொடர்ந்து நடந்திருந்தேன் !
சிரிப்பு பேரலையாய்
பொங்கி எழுகையில்
கரையில் நின்று
கால் நினைத்தேன் !

வாழ்க்கை தடங்கல்
வந்து வந்து
கொன்றும்
இந்த மரணம்
பயத்துடன் நெருங்க
நிழலில்  நீ
இருக்கிறாய்
நண்பனே!

பருவம் மாற மாற
தோற்றம் மாறத்தான்
செய்யும்
நட்பு அதில் சிக்காத
ரகசியம் யாருடன்
நின்று பதில் சொல்லும் !

இரு நண்பர்களின்
இதயத்தில் ஆதிகாலமாய்
பூத்தும்
இன்றும் வாசனை
மாறா பன்னீர் பூ
நட்பு!

தியாகத்தின் தீபம்
உன் ஆனந்தத்தின்
வெளிச்சத்தில் வெளி வருகையில்
என்னை நீ எரித்தாலும்
உன் சுடர் காக்க
இரு கைகள் மறைவாக
நிற்கும் நிமிடங்கள்

என்னுடைய வாழ்
வசந்த காலம்!

1 comments:

Philosophy Prabhakaran said...

நல்ல கவிதை...

// இரு நண்பர்களின்
இதயத்தில் ஆதிகாலமாய்
பூத்தும்
இன்றும் வாசனை
மாறா பன்னீர் பூ
நட்பு! //

இந்த வரிகள் ரொம்ப சூப்பர்...

Post a Comment