Monday 13 December, 2010

காதல் கடிதம்


யார் கூற்றிலும்
என் மனம் கலைந்து
போகவில்லை
தெளிவாக இருக்கிறேன்
முடிவாக இருக்கிறேன்
விரைந்து நடக்கிறேன்
கையில் இரு பூக்கள்
ஒன்று எருக்கம் பூ
மற்றொன்று மல்லி பூ
எதை எடுத்தாலும்
காதலனாய் வரவேற்று
நிற்பேன்
மறுத்துவிடு விரும்பிவிடு
பூக்கள் சொல்லட்டும்
வாய் திறந்து பேசிவிடாதே
என் காதல் மௌன மொழியிலே
பிறக்கட்டும் அல்ல சாகட்டும் !

1 comments:

Philosophy Prabhakaran said...

மல்லிகையை தேர்ந்தெடுக்க வாழ்த்துக்கள்...

Post a Comment