Monday 28 February, 2011

அறை கண்ணாடி





அறைமுழுக்க மௌனம் லயித்து

உரையாடல் ஒலிகளை
மெல்ல மெல்ல
தேடி திரியும் உதடுகள் ....

துவண்டு இருக்கும்
இதய விரிசல்களால்
காற்றில்லா பிரதேசமான
உதட்டின் உச்சி
கவிழ்ந்து மணக்கிறது
கண்ணீர் உப்புகரிசல்களாய் .....

கசப்பான வாசத்தின் தோற்றம்
பின்பம் மாறிவிட
ஊர்
கண்ணாடியின் இலைகள்
தேய தொடங்கும் முன்
நிழல் உருவில் மருவி
வடிகிறது நடுக்கத்தின்
பால்குடி குழந்தை ..............


எதிர்வரும் காலம்
தூளியில் தாலாட்ட
நம்பிக்கையில் விழுந்து
நிற்சப்தம் மறைத்து
நிம்மதியான கனவுகளுடன்
உறக்கத்தில் பறக்கிறது
வெள்ளி வான் கானக்குயில்..



























0 comments:

Post a Comment