Tuesday 1 March, 2011

பயணம்

கண்ணில் தென்படும்
இளம் வஞ்சியர் கூடும்
இடமெல்லாம்
நாற்காலியிட்டு அமர்கிறது
கொல்லி கண் பிசாசு ....

நான் பருவத்துடன்
படகில் ஏறிவிட்டேன் போல
இன்றைய பொழுதுகள்
இக்கரையும் அக்கறையும்

 சுகத்தை அள்ளி கொண்டு
செவ்வானமாய் மிதந்து
பூமழையாய் தூவி விழுகிறது ....

விடிந்து எழுந்ததில் இருந்து
இளமையின் ததும்பல்கள்
இங்கே ஏராளம்
உண்மை தான் ...

சிறு புன்னகையால் கொன்று வைத்தால்
ஒருவள்

அருகில் நெருங்க நெருங்க
என் அழகின் கர்வத்தை
தன் சட்டைப்பையில் மடித்து வைத்து
சென்றால் ஒருவள்

உறக்க முன்மொழிந்து
அச்சம் அவிழ்த்து
மௌனத்தை
கட்டுடைத்தால் ஒருவள்

விலாசம் இன்றி
திருவிழா குழந்தை ஆனதும்
காற்றில் பேசி செய்கையில்
திசைகாட்டி பலகையாய்
மற்றொருவள் ...


பேருந்தின் இருக்கையில்
பின் அமர்ந்து கொண்டு
முன் அமர்ந்த என்னை
தோடிக்கு ஆடும் பாம்பாய்
தலை திரும்ப செய்யும்
ஒருவள் ....

பேருந்து கூட்டத்தின்
நடுவில்
பயண சீட்டின் பண்டை மாற்று
முறையில்
சீட்டு எடுக்கும்
பச்சைக்கிளியாய் மற்றொருவள்...

பாதசரிகளின் நடைப்பாதையில்
இடதும் வலதும்
நகர வைத்து
கண்டிடாத பூகம்பத்தை
உள்ளுக்குள் உளிக்கிவிட்டு
செல்லும் ஒருவள்

மொட்டை மாடியின்
முகம் பார்க்கும் கண்ணாடியில்
போலி முகத்தை தேடி

கை தவறி விழுந்த
வலய கோடுப் போல்
புருவத்தை உயர்த்தி
சிலிர்துகொண்டவள் மற்றொருவள் .

 வழி தோறும
ஆயிரம் முகங்கள்
அழிந்து விடுகின்றன

வாரம் தோறும
கனவுகளின் முகங்களும்
பிறந்து மரிக்கின்றன !

தேடல் கொண்ட உலகில்
தேடலுடன் அடங்கிய
என் பயணம்
என்னவளை தேடி
பிரகாசமான முனுமுனுப்புகளுடன்....
























0 comments:

Post a Comment