Tuesday 6 July, 2010

கனவுப்பை

சுவாசத்தில் நீ
உயிருடன் கலந்ததை
கேள்வி கேட்டாய்
என் களவு நெஞ்சம்
உள்ளே பிரகாசமாய் 
வெடித்து சிதறுகிறது!
சில நேரங்களில்
என்னுள் முளைவிடும்
சின்ன கோபம்
உன்செவ்வாயில் தெறிக்கும்  
பயம்
உன்னை உதறும்
அளவுக்கு கொண்டு செல்லும்
சூழல்!
வெறும் தற்காலிக
நிழல் அல்லவா!
இல்லையேல்
இரவு பொழுதின் மடியில்
கண்களுக்குள் கண்டு கொண்ட
சிம்ம சொப்பன
கனவுப்பை
உண்மையில் எடுக்க
யாருக்கு தான்
சமர்ப்பணம்!

0 comments:

Post a Comment