Sunday 18 July, 2010

பல்கலை

கண்களின் நயம்
கலைகளில் தேடி
திரிந்தன.

நின்று பேசிய
நிழல்
வெறுத்து ஒதுக்கிய
இருட்டு.

துடிதுடிக்கும் பதற்றம்
மென்மையான நலினம்
ஆரவாரமாகும் அதிர்ச்சி
அடிமையாக்கும்  அமைதி

தனித்துயங்கும் தனிமை
கூச்சலிடும் வலி
குழப்பமிடும் குதற்றம்

உலகின் அலட்சியம்
வீணடித்த முயற்சி
உற்சாகபடுத்திய வெற்றி
காயப்படுத்திய தோல்வி

முற்று பெற்று

கால்  பதிக்கும்
உணர்ச்சி
மற்றுமொரு
தேடலுக்கு விருந்து குடுக்க
கண்களே காலங்களை
கைது செய்!

0 comments:

Post a Comment