Tuesday 6 July, 2010

கனவுகள் நினைவாகுமா

உறங்காத  விழிகளுடுன்


உறங்கப்போகும்   நிலவிடம்
சற்று  தொடர்ந்து  வா
என்று  சொல்ல  

உறையவைக்கும்  குளிரிடம்

இதமான  தேனீருடன்
விருந்து  குடுக்க
வீடு  வா
என்று  சொல்ல

ஓயாமல்  உழைத்திடும்

சுட்டெரிக்கும்  சூரியனை
ஓய்வெடுக்க
தனி  அரை  கட்ட

வட்டமிடும்  வின்மிநிக்கும்

வானில் விழும்  நட்சத்திரத்துக்கும்
ஜோதிடம்   பார்த்து
கல்யாணம்  செய்ய  

கண்ணை  பறிக்கும்

மங்காத   மின்னொளியை  
தொட்டில்  கட்டி
தூங்க  வைக்க

பறந்து  போகும்

மென்மையான  மேகத்தை
கயுறு  கட்டி
வீட்டின்  கூரையில்  
வைத்துவிட

நதியில்  விழும்

நிலவின்  பின்பத்தை
சொந்தம்  கொண்டு  
வசூல்  செய்ய

காற்றில்  ஓடும்

நிறமில்லா  இசையை
சத்தமில்லாமல்  
அறைந்து  பார்க்க

சுற்றும்  பூமி

அடியில்  சென்று
ஊர்  சுற்றி  பார்க்க

ஆசை  தான்

கனவுகள்  நினைவாகுமா !








 

0 comments:

Post a Comment