உறங்காத விழிகளுடுன்
உறங்கப்போகும் நிலவிடம்
சற்று தொடர்ந்து வா
என்று சொல்ல
உறையவைக்கும் குளிரிடம்
இதமான தேனீருடன்
விருந்து குடுக்க
வீடு வா
என்று சொல்ல
ஓயாமல் உழைத்திடும்
சுட்டெரிக்கும் சூரியனை
ஓய்வெடுக்க
தனி அரை கட்ட
வட்டமிடும் வின்மிநிக்கும்
வானில் விழும் நட்சத்திரத்துக்கும்
ஜோதிடம் பார்த்து
கல்யாணம் செய்ய
கண்ணை பறிக்கும்
மங்காத மின்னொளியை
தொட்டில் கட்டி
தூங்க வைக்க
பறந்து போகும்
மென்மையான மேகத்தை
கயுறு கட்டி
வீட்டின் கூரையில்
வைத்துவிட
நதியில் விழும்
நிலவின் பின்பத்தை
சொந்தம் கொண்டு
வசூல் செய்ய
காற்றில் ஓடும்
நிறமில்லா இசையை
சத்தமில்லாமல்
அறைந்து பார்க்க
சுற்றும் பூமி
அடியில் சென்று
ஊர் சுற்றி பார்க்க
ஆசை தான்
கனவுகள் நினைவாகுமா !
0 comments:
Post a Comment