Tuesday 6 July, 2010

காதல் சாபம்

  உன்
வருகையின்  இருக்கங்கள்
மனதை  வருடும்  
பொழுது
பல  கோணங்களில்
இதயம்  உருமாறும் …..
அதுவே
நீ வந்தபின் ,
உன்னை
பின்தொடரும்  நிழலும்
சற்று  தள்ளியே  நடக்கும்
காரணம்
உன்  வெட்கத்தை  கண்டு
மிரட்சியில்
உறைந்துவிட்டதால் !
இருந்தும் ,
நீ பேசிவிட்டு  
சென்ற
அந்த  தருணங்களில்
வருகின்ற  அமைதி
உற்சாகத்தில்  என்றும்
தத்தளிக்கும் !
என்  வாசலில்
நீ தூரத்தில்  
வின்னைதாண்டிய  
உறவாய்!
நீ  நெருக்கத்தில்  மண்ணில்  
விழும்
எரிக்கல்லாய் !
என் செய்வேன்
நான்  வாங்கிய
காதல் சாபம் !

0 comments:

Post a Comment