உன்
வருகையின் இருக்கங்கள்
மனதை வருடும்
பொழுது
பல கோணங்களில்
இதயம் உருமாறும் …..
அதுவே
நீ வந்தபின் ,
உன்னை
பின்தொடரும் நிழலும்
சற்று தள்ளியே நடக்கும்
காரணம்
உன் வெட்கத்தை கண்டு
மிரட்சியில்
உறைந்துவிட்டதால் !
இருந்தும் ,
நீ பேசிவிட்டு
சென்ற
அந்த தருணங்களில்
வருகின்ற அமைதி
உற்சாகத்தில் என்றும்
தத்தளிக்கும் !
என் வாசலில்
நீ தூரத்தில்
வின்னைதாண்டிய
உறவாய்!
நீ நெருக்கத்தில் மண்ணில்
விழும்
எரிக்கல்லாய் !
என் செய்வேன்
நான் வாங்கிய
காதல் சாபம் !
0 comments:
Post a Comment