Tuesday 6 July, 2010

வெள்ளை நிழல்
ஈரமான பாதத்தை
முத்தமிட்டு
அலைகள் கரையிடம்
மண்வாசனை தேடின!

மயிலிறகாய் மனம்
பின்னால் சென்று
பயணித்து வந்தன!

கண்கள் குறுகிய
பார்வையில் தவறி
நெடும்தூரம் நடந்து
கொண்டு இருந்தது!

எங்கு தேடியும்
கிட்டவில்லை!
அசதியில் அந்தியும்
முடிந்து தான் போனது!

மீண்டும் அந்த
குயிலின் குரலை
தேடித்தான் திரிகிறான்!
விழாக்காலம் இல்லை
ஊதாங்குழல்
விற்பனைக்கு இல்லை!

0 comments:

Post a Comment