Monday 19 July, 2010

ஆவலான நினைவுகள்

உரையாட ஆவலாய்
உன்வாசலில்
காத்து நிற்கிறேன் !

நேற்று வசப்பட்டு
பின்னிய பொழுதுகளில்
நடுநிசி நாசியில்
விழுங்கிய வார்த்தைகள்
இங்கனம் உன்முன்
சமர்ப்பணம் !

நீண்ட இடைவெளியில்
உணர்ச்சி
மைல்கல்லின் கணக்கில்
நெருங்கி விட்டன!

கேள்வி கனிகள்
உதிரதான் செய்கிறது!
உயிர் காம்பின்
பால் வடியவும்
முயல்கிறது!

இருந்தும்
ரத்த குழாயின்
மெல்லிய கசிவுகள்
ரத்த கட்டேரியின்
படலம் மிகாருகமையில்!

பிண்டம் வைத்து
அண்டத்தின் காலடியில்
ஆர்பரிக்கிறேன்
தொலைதூரம் சென்றுவிட்டாய்

தேடலின் இறுதிவரை
துலாவியும்
கண்ணில் அகப்படவில்லை!

வருடத்திற்கு ஒருமுறை
காயம்
ஆறாம் அறிவுக்கு
தீனியாய் !




0 comments:

Post a Comment