Friday 9 July, 2010

பொற்குவியல்


 உலகமே விழித்து கொண்டது
இன்னும் ஏன்
உன் கரைகள்
மட்டும்
நீரலைகள் பட்டும்
இறந்த கால சுவடுகளை
தேடி திறிகின்றன!

கையிலே நூறு
கலைகள்
உன் வரவேற்புக்காக
சிவப்பு கம்பளம் விரித்து
கால வாசலில்
தவமிருந்து
கால பைரவேனே
உறங்கிவிட்டான்!

அவன் தூக்கத்தை
கலைத்து
காதுனில்
ஒரு பூ வை !
அதனை சூடி கொள்ள
ஆயிரம் தேவதைகள்
வண்ணமயமான
விளக்குடன்
வீடு வருவர் !

தொலைந்து போன
உன் சேதிகள்
சுடர் விடும்
விளக்கில் நாணத்துடன்
மறைந்து கொள்ளும்!
  
கயூதரிய கைக்களுக்கு
நீ கைகுடுக்கும்
சூரியனாய் மாறிடிவாய்!

உன் ஒளிக்காலம்
படை எடுக்க
முந்திடும்
உன் இருள்
உயிர் அடங்கும் முன்
எடுத்திடுவாய் பொற்குவியலை!




0 comments:

Post a Comment