Wednesday 7 July, 2010

பார்த்ததும்   ரசித்ததும்
ரசித்தது 
இதமான  முத்தத்தை
இது  வரை 
காணாத   கண்ணங்கள்
மழையின் 
ஒரு  துளி  நீர் 
தந்து  தான் 
அந்த  பல  நாள் 
தாகம்  உடைந்தது !

உடும்பின்  பிடியை 
இது  வரை 
காணாத  கண்கள் 
பருந்து 
ஒன்று  கோழிக்குஞ்சை 
பிடிக்கையில் 
பார்த்து  மிரட்சியானது !

உணர்ந்தது 
உயிரின்  வலி 
தெரியாத  நெஞ்சம் 
ஏழாம்   அகவையில் 
முதல்  முறை 
சாலை  விபத்தில் 
துடித்தவரை கண்டதும் 
உணர  தொடங்கியது !

பிரிவின்  வலி 
தெரியாத  வயதில் 
திருவிழா  கூட்டதின் 
நெரிசலில் 
சற்று  நேரம் 
தேம்பி  நின்றது !

ஏமாற்றத்தின்  வலி 
எதிர்பாரத  கணங்களில் 
பள்ளி  பேருந்தின்  இருக்கைக 
பையை  தூக்கி  போட்டு 
கிழிந்தமைக்காக 
வீட்டில்  உதய் 
வாங்கியது !

ஆசையாய் வாங்கிய 
ஐந்து ரூபா 
பலூன் 
வெப்பத்தின்  தாக்கத்தில் 
உடையாமல்  இருந்தாலும் 
நண்பனின்  நகம் 
பட்டு  உடைந்தது  போனது !

ரசித்தது 
மிட்டாய்  கடைக்காரன் 
கடன்  தரமாட்டான் 
என்று  தெரிந்தும் 
அவன்  திரும்பிய 
சமயங்களில் 
விருப்ப  பட்டதை 
திருடி  தின்றது !

பார்த்தது 
இசாணி மூலையில் 
மேகம்  கருது 
தான்  இருந்தது ,
இடியுடன்  மழையில் 
காவலுக்கு  சென்ற 
வேலையில் 
மட்டைவிளுந்து 
பாவும்  அணிலும் 
பதறி  தான்  ஓடியது !






0 comments:

Post a Comment