பார்த்ததும் ரசித்ததும்
ரசித்தது
இதமான முத்தத்தை
இது வரை
காணாத கண்ணங்கள்
மழையின்
ஒரு துளி நீர்
தந்து தான்
அந்த பல நாள்
தாகம் உடைந்தது !
உடும்பின் பிடியை
இது வரை
காணாத கண்கள்
பருந்து
ஒன்று கோழிக்குஞ்சை
பிடிக்கையில்
பார்த்து மிரட்சியானது !
உணர்ந்தது
உயிரின் வலி
தெரியாத நெஞ்சம்
ஏழாம் அகவையில்
முதல் முறை
சாலை விபத்தில்
துடித்தவரை கண்டதும்
உணர தொடங்கியது !
பிரிவின் வலி
தெரியாத வயதில்
திருவிழா கூட்டதின்
நெரிசலில்
சற்று நேரம்
தேம்பி நின்றது !
ஏமாற்றத்தின் வலி
எதிர்பாரத கணங்களில்
பள்ளி பேருந்தின் இருக்கைக
பையை தூக்கி போட்டு
கிழிந்தமைக்காக
வீட்டில் உதய்
வாங்கியது !
ஆசையாய் வாங்கிய
ஐந்து ரூபா
பலூன்
வெப்பத்தின் தாக்கத்தில்
உடையாமல் இருந்தாலும்
நண்பனின் நகம்
பட்டு உடைந்தது போனது !
ரசித்தது
மிட்டாய் கடைக்காரன்
கடன் தரமாட்டான்
என்று தெரிந்தும்
அவன் திரும்பிய
சமயங்களில்
விருப்ப பட்டதை
திருடி தின்றது !
பார்த்தது
இசாணி மூலையில்
மேகம் கருது
தான் இருந்தது ,
இடியுடன் மழையில்
காவலுக்கு சென்ற
வேலையில்
மட்டைவிளுந்து
பாவும் அணிலும்
பதறி தான் ஓடியது !
0 comments:
Post a Comment