Sunday 8 August, 2010

பெண் தீண்டாமை



ஊடலே கொள்ளாமல்
இருக்கிறேன்
உன் உதவி கரம்
வேண்டுகிறேன் !

தார்மீக பொறுப்புகள்
ஒழிந்து வாழும்
ஏ இரவில்லா நகரமே!

அத்துமீறி ஓர் இருளை
அவனுக்கு அவிழ்த்து
புணர்ச்சியை பழகவிடு !

அவன் தேகசுகத்தின்
அமுதை அங்கீகரிக்க
ஓர் சட்டமிடு!

அது மரண தண்டனையாயின்
உயிரணுக்கள் மரண
ஒலமிட்டு வெளிவரும் !

பாருலகின் ஏழ்மையை
வேரறுக்க
புதுவிதை உருவாகட்டும் !

அன்றாவது தீரட்டும்
இந்த
கன்னிப்பெண்ணின்
தீண்டாமை!

0 comments:

Post a Comment