Friday 20 August, 2010

செல்லக்குழந்தைகள்



இரு குழந்தைகள்
கட்டிலிலே
நிர்வாண குளியல்
தொடங்கயிலே

அன்பை அளவில்லாமல்
எடுத்து
ஓர் உயிராய் இணைத்து
பூமாலை ஒன்றை தொடுத்தார்

அரைமணியோ ஒருமணியோ
நேரம் அங்கே
அடிமையாக்கப்பட்டது

புது புது வாசத்துடன்
மூக்கும் மர்மத்தை
நீண்டு கொண்டு இருந்தது

உடல் வானில் காயப்போட்ட
துணியாய்
ஈரம் உலர்ந்து
சூட்டை கைப்பற்றியது!

தொடுத்த மாலை உதிர
வழி பிறந்ததால்

கார்மேக கைகளும்
கிளியோவிய கால்களும்
பிரிந்து செல்கின்றன!

அங்கே வயதான
கிழவன் நின்று
வாழ்ந்து சொல்கிறான்
மோகம் முப்பது நாள்
சொல்லியவன் ஒரு சோம்பேறியென்று!





0 comments:

Post a Comment