Monday 25 April, 2011

அடுக்குத்தொடர்


அலைகடலென தாவி வரும்
ஆறடி அறிவே
அன்பில் தத்தளிக்கும்
மழையின் மாங்குயிலே
பொன்மேக சிரிப்பே
பூங்காவன சிலிர் பில்லே
சின்ன சிறு குருவியே

சிற்றிடை நதியே
வாதம் செய்து வார்த்தைகளில்
வதம் செய்ய துடித்து  
பின்தொடரும்  அருவியே
தென்னை ஒளியே
தேன்மதுர சுவை பேச்சே
அடங்காமல் கதிர் வீசும் நெற்றியே
சாலையிடும் பாதமே
கோலமிடும் வெட்கமே
நளினத்தின் சுளியே
நாதத்தின் மொழியே

தேவதாயின் மகளே
தேடலின் பசியில் ஒளிந்து
தீராத ஆசையில் விழைந்து
எங்கே மூழ்கிவிட்டாய்
தூக்கம் கலைத்து
விழி வாசிப்பாயா
இந்த உலகம் கவர்ச்சியாய்
உடை  அணிந்து விட்டது
பார்த்து விட்டு போ ............



1 comments:

Unknown said...

good ya

comment my web site also
http://eyepicx1.blogspot.com/

Post a Comment