சற்று தள்ளியே 
நின்று இருந்தாலும் 
பேருந்து கம்பிகளை 
இருக்க பிடித்திருந்தாய் !
தோழிகள் பார்க்காத 
நேரத்தில் ஓரக்கண்ணில் 
புருவம் உயர்த்தினாய்!
பின்னால் வருகையில் 
நடை பழக கற்றுக்குடுத்தாய் !
கண்களை தூண்டிலிட்டு 
பொம்மையாய் ஏந்திச்செல்ல
மனதை சிந்தவிட்டாய்!
தலையினை கோதி
மினுக்கட்டாம் பூச்சியைப்போல்
இமைகளை மிதக்க வைத்திட்டாய்!
நுனி நாக்கை முன் நீட்டி 
நுறயிரலை
பொங்க வைக்கிறாய் !
உதடுகளை உரசி 
காதுகளை கூச்சத்தில் 
பணியவைகிறாய்!
வளையல்களை குலுங்க செய்து 
சில்லறை காசுகளை 
நினைவு படுத்தினாய் !
சப்தமிடும் கொலுசுக்குள் 
சத்தமில்லாமல் 
சரணடைய வைத்திட்டாய்!
கழுத்து வலயத்தின்
பற்கடியில் 
எழும்புகளை நொறுக்கிட்டாய்!
காதுவளைய தொங்கலில் 
உயிர்தன்னை 
தொங்க விடுகிறாய்!
மூச்சு சுவாச 
வேகத்தில் ஆசைகளை 
கொளுத்திவிடுகிறாய் !
பிறர் நெருங்கும் கூச்சத்தில் 
தொட்டா சினுங்கியாய்
சுருங்கி விடுகிறாய்!
அனைத்திருக்கும் புத்தகத்தில் 
ஆண்பிள்ளைகளை 
புதைத்து விடுகிறாய் !
விதைத்து இருக்கும் 
மார்பின் சூதில் 
பிறர் எச்சில் வழியவே 
விழிகளை விலைக்கு 
வாங்கினாயோ!
நூறு கொடியால் 
தோன்றட்டும் 
தேவதை நீயே 
அழகின் பிள்ளையாய் 
என்றும் தவழட்டும் !
.jpg)
1 comments:
வளவன் ...அவள் எனக்குள்ளும் மிதக்கிறாள் உங்கள் வரிகளினூடே!
Post a Comment